தற்போது தமிழகத்தில் காய்கறி சந்தைகளில் ஒளிந்து விளையாடும் கொரோனா.தொடர் பரவல் ஏற்படுவது எப்படி திடுக்கிடும் தகவல்.
தற்போது தமிழகத்தில் காய்கறி சந்தைகளில் ஒளிந்து விளையாடும் கொரோனா.தொடர் பரவல் ஏற்படுவது எப்படி திடுக்கிடும் தகவல்.
தற்போது தமிழகத்தில் தொடர்ச்சியாக காய்கறி சந்தைகளில் கொரோனா மிக அதிகமாக பரவுவதால் மக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இம்மாதம் 18ஆம் தேதி 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 364 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் மட்டும் சுமார் 7117 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1622 பேர் குணமடைந்துள்ளனர்.பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் 60.5 விழுக்காடு களாக காணப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளியின்று தொடர்ந்தது காய்கறிகள் விற்று வந்ததால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோரு தொற்று பரவியது.
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள காய்கறி சந்தையில் தற்போது தோற்று இருவருக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் சக வியாபாரிகள் 150 பேரை தனிமைப்படுத்தி பரிசோதிக்கவும் அவர்களுடைய
உறவினர்கள் மற்றும் காய்கறி வாங்க வந்தவர்களை பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
இங்கு உள்ள வியாபாரிகளுக்கு தற்போது கொரோனா எப்படி பரவியது என்று இதுவரை கண்டறியப்படவில்லை
இதனால் எம்ஜிஆர் நகரில் உள்ள காய்கறி சந்தை மூன்று நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்தடுத்த காய்கறி சந்தைகளில் தொற்று அதிகம் பரவுவதை அறிந்து மக்கள் மிகவும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதனால் சென்னையிலுள்ள கோயம்பேடு,திருவான்மியூர், எம்ஜிஆர் நகர் சந்தை உட்பட மற்ற இடங்களில் உள்ள சந்தைகளிலும்
வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காய்கறி
சந்தை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மற்ற காய்கறி சந்தைகளிலும் மக்கள் இடைவெளி விட்டும், முக கவசம் அணிந்தும் வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இந்த தொற்றானது எம்ஜிஆர் நகர், கோயம்பேடு, ஆகிய காய்கறி சந்தைகளில் இருந்து பரவிய நிலையில் இந்த பரவலை தடுக்கும் விதமாக சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி மார்க்கெட் முழுவதுமாக இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுகின்றன என வியாபாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.